Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

கிளிநொச்சி

கிளிநொச்சியில் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் பெற்ற இரு அதிகாரிகள்!

கிளிநொச்சி ,உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் அனுமதியற்ற கட்டிடம் ஒன்றிற்கு கட்டிட அனுமதிக்காக நேற்று (04-09-2024) லஞ்சம் பெற்ற இரு அதிகாரிகளையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதி வான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நேற்றைய தினம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிககால் கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் பகல் கிளிநொச்சி…

G.V.பிரகாஸ் இசையமைப்பில் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவனின் பாடல் தென்னிந்திய திரைப்படத்தில்!

ஈழத்தில் கலைத்துறையில் சாதித்து வரும் பாடலாசிரியர் ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன்.! யுத்த பூமியில் வாழ்ந்து, யுத்தம் சப்பித் துப்பிய எச்சமாக வாழ்ந்துவரும் ஈழத்துஎழுத்தாளர் தன.ரஜீவன் அவர்கள் இன்று இசைத்துறையில் கொடி கட்டிப்பறக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.பல இன்னல்கள் துன்ப துயரங்களையும் தாண்டி சாதித்து தனது முயற்சியில் பெருவெற்றி கண்டுவருகின்றார். தென்னிந்திய பிரபல திரை நட்சத்திரம்G V பிரகாஸ்…

முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதிகரிக்கும் வங்கி மோசடிகள்!

இலங்கையின் வடக்கில் தமிழர் வாழ் பகுதிகளை இலக்கு வைத்து வங்கி மோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான மோசடிகள் அதிகளவு பதிவாகியுள்ளன இதனால் பெரும் தொகை பணத்தினை மக்கள் இழந்துள்ளார்கள் இந்த விடையம் தொடர்பாக மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என நாட்டில் உள்ள வங்கிகள் ஊடகங்கள் ஊடாக அறிவித்து வருகின்றன. இந்தநிலையில் முல்லைத்தீவு…

விசுவமடு பகுதியில் இரு குழுக்குளுக்கிடையில் மோதல் நால்வர் மருத்துவமனையில்!

விசுவமடு பகுதியில் இரு குழுக்குளுக்கிடையில் மோதல் நால்வர் மருத்துவமனையில்! கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான கண்ணகிநகர்,புன்னைநீராவி,தர்மபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் இன்று 31.07.2024 இடம்பெற்றுள்ளது.விசுவமடு 12 ஆம் கட்டைப்பகுதியினை சேர்ந்த நபர்கள் உள்ளிட்ட குழுவினரால் மற்றைய குழுவினர்…

கிளிநொச்சி பளைபகுதியில் 6 இலட்சத்திற்கு ஏலம் மாம்பழம்!

கிளிநொச்சிபளை கச்சார் வெளி தான்தொன்றி பிள்ளையார் கோவில் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ஏலம்போயுள்ளது. வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப்பகுதியில் கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகேட்சவ விஞ்ஞாபனம் 13.07.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில்  5ம் திருவிழாவான மாம்பழத்திருவிழா 17.07.2024 இன்று நடைபெற்றுள்ளது வசந்தமண்டப பூசைகள்…

வன்னியின் பெரும்சமர்- கிளிநொச்சி மகாவித்தியாலயம் தனதாக்கியுள்ளது!

வன்னியின் பெரும்சமர் எனப்படும் கிளிநொச்சி மாகவித்தயாலய அணிக்கும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி அணிக்கும் இடையிலான இரண்டுநாள் துடுப்பாட்ட போட்டியில் கிளிநொச்சி மகாவித்தியாலய அணி வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கியுள்ளது. வன்னியின் பெரும்சமர் 13 ஆவது தடவையாக இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்றுள்ளன. இன்று இறுதிநாள் போட்டியில் 111 ஓட்டங்கள் பெற்று கிளிநொச்சி…

பிரமந்தனாற்றில் கத்திக்குத்திற்கு பலியான இளைஞனுக்கு நீதிகோரி திரண்ட மக்கள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரமந்தனாற்று  பகுதியில் இளைஞன் ஒருவனால் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிரிழந்த குடும்பஸ்தர் ஒருவரின் உயிரிழப்பிற்கு நீதிகோரியும் கைதான சந்தேக நபருக்கு பிணைவழங்கவேண்டாம் என்றும் வலியுறுத்தியும் கிராம மக்கள் ஒன்றிணைந்து 09.04.2027 அன்று  மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள். கடந்த 04.04.2024 அன்று கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலத்தில் இடம்பெற்ற விளையாட்டு போட்டியினை…

வன்னிப்பெருச்சமர்-2024 துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கும் இடையிலான வருடாவருடம் நடைபெறும் ”வன்னிப்பெருச்சமர்” துடுப்பாட்ட போட்டியானது இந்த வருடமும் சிறப்பான முறையில் இன்றைய தினம் (10) காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பு ஆரம்பமானது. இந்தப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம…

இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 15,693 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு 15,693 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானம் விவசாய அமைப்புகளின் முழுமையான பங்குபற்றுதலுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தின்  கீழான 2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்செய்கையினை  முன்னெடுப்பதற்கான இறுதிக் கட்ட கலந்துரையாடல் இன்று(08-04-2024)  நீண்ட இழுபறிக்கு  பின்னர் பகல் 11 மணி…

புதுக்குடியிருப்பினை சேர்ந்த இருவர் பூநகரியில் வெடிபொருட்களுடன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த இருவர் பூநகரிபகுதியில் வெடிபொருட்களுடன் கிளிநொச்சி பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் 07.04.2024 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் றெட்பான விசுவமடுவினை சேர்ந்த 22 அகவையுடைய நபர் மற்றும் குரவில் உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நபர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களிடம் இருந்து ரி.என்.ரி வகை…