Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

நெத்திப்பொட்டு வெடியில் உயிரிழந்த யானை-தலையில் இருந்து குண்டு மீட்பு!

உயிரிழந்த யானையில் இருந்து முக்கிய தடையப்பொருள் மீட்பு!முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கள்ளியடி வயல் வெளிப்பகுக்கு பக்கமாக உள்ள பற்றைக்காடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் யானையின் உடலம் ஒன்று இன்று 02.08.2024 இனம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை புதுக்குடியிருப்பு பொலீசாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்….

முல்லை கலைஞர்களின் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து மட்டு-அமிர்தகழியில்..

முல்லைத்தீவு கலைஞர்கள் முல்லைமோடி நடையில் நடித்து வரும் கோவலன் கண்ணகி நாட்டுக்கூத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேற்றப்படவுள்ளது. மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பிள்ளையார் ஆலயத்தின் திருவிழாவினை முன்னிட்டு கிழக்கு பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் உள்ளுர் கலைகளுக்கான விழா கடந்த 31.07.2024 மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு பல்கலைக்கழகத்தினால் பாரம்பரிய அரங்காற்றுகைகளும்,காட்சிப்பொருளும் என்ற…

முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதிகரிக்கும் வங்கி மோசடிகள்!

இலங்கையின் வடக்கில் தமிழர் வாழ் பகுதிகளை இலக்கு வைத்து வங்கி மோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான மோசடிகள் அதிகளவு பதிவாகியுள்ளன இதனால் பெரும் தொகை பணத்தினை மக்கள் இழந்துள்ளார்கள் இந்த விடையம் தொடர்பாக மக்கள் அவதானமாக செயற்படவேண்டும் என நாட்டில் உள்ள வங்கிகள் ஊடகங்கள் ஊடாக அறிவித்து வருகின்றன. இந்தநிலையில் முல்லைத்தீவு…

விசுவமடு பகுதியில் இரு குழுக்குளுக்கிடையில் மோதல் நால்வர் மருத்துவமனையில்!

விசுவமடு பகுதியில் இரு குழுக்குளுக்கிடையில் மோதல் நால்வர் மருத்துவமனையில்! கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான கண்ணகிநகர்,புன்னைநீராவி,தர்மபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் இன்று 31.07.2024 இடம்பெற்றுள்ளது.விசுவமடு 12 ஆம் கட்டைப்பகுதியினை சேர்ந்த நபர்கள் உள்ளிட்ட குழுவினரால் மற்றைய குழுவினர்…

மல்லாவியில் இளைஞன் உயிர் இழப்பில் சந்தேகம்!

கனடாவுக்குச் செல்வதற்குத் தயாரான நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யோகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசா சஜீவனின் மரணம் கழுத்து நெரித்ததாலேயே நிகழ்ந்துள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய ஆனந்தரசா…

வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞன் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மல்லவி பிரதேசத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் வெளிநாடு செல்ல காத்திருந்த நிலையில் வவுனிக்குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்;த சம்பவம் 30.07.2024 இன்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை 27 வயது ஆனந்தரசா சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.29.07.2024 நேற்று பிற்பகல் 20 இலட்சம் பணத்தினை  கொண்டு யோகபுரத்தில் இருந்து பாண்டியன்…

முல்லைத்தீவு சந்தை கடைத்தொகுதியில் தீ விபத்து!

முல்லைத்தீவு நகர்பகுதியில் கடைத்தொகுதிகள் தீப்பிடித்து எரிந்துள்ளன! முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டத்தில் அமைந்துள்ள வணிக நிலையங்கள் இரண்டு இன்று அதிகாலை தீ பிடித்து எரிந்து சேதடைந்துள்ளன. இரண்டு கடைகள் மற்றும் களங்சியம் ஒன்றும் இந்த தீவிபத்தின் போது சேதமடைந்துள்ளன.இரண்டு கடைகளும் முற்றாக எரிந்துள்ளதுடன் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயினால் எரிந்து…

விளையாட்டில் சாதனை படைத்த முத்தையன் கட்டு இளைஞர்கள் கௌரவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் முத்தையன் கட்டு ஜீவநகர் கிராமத்தில் பிறந்து வளர்ந்து தேசியரீதியாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டில் சாதனை படைத்து கிராமத்திற்கும் பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்கும் பெருமை தேடிதந்த மூன்று விளையாட்டு வீரர்களை அவர்களின் கிராமமான ஜீவநகர் கிராம மக்கள் ஒன்றிணைந்து கௌரவித்துள்ளார்கள். அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் முல்லைத்தீவு முத்தையன் கட்டு இடதுகரை பாடசாலையில் இருந்து…

முள்ளியவளையில் பற்றி எரியும் தேக்கங்காடு!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை ஒட்டுசுட்டான் வீதியில் முள்ளியவளை பொலீஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள தேக்கங்காடுகள் இன்று(27) மாலை தொடக்கம் தீயில் எரிந்து வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைநாட்களாக கடும் வெப்பமான காலநிலை காணப்படுகின்றது இந்த நிலையில் குறித்த தேக்கங்காட்டு பகுதி பற்றி எரிந்து வருகின்றது இது விசமிகளால் வைக்கப்பட்ட தீயா அல்லது…

முள்ளியவளையில் சிறப்புற செயற்பட்டுவரும் வித்தியா தீபம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளளியவள மாமூலை பகுதியில் அமைந்துள்ள வித்தியா தீபம் என்ற புலம்பெயர் தமிழர்காளல் உருவாக்கப்பட்ட கல்வி மற்றும் தற்சார்ப்பு பொருளாதார மேம்பாட்டிற்காகவும், நலிவுற்ற எம்மை தற்சார்பே காக்கும் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட வித்தியா தீபம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மூன்றாவது கட்ட மாணவர்களுக்கான ஆறுமாத கால தையல் பயிற்சி நிறைவும் சான்றிதழ் வளங்கும் நிகழ்வும்…