Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் வீட்டிற்குள் கஞ்சா!

புதுக்குடியிருப்பில்- வீட்டில் பதுக்கப்பட்டிருந்த கஞ்சாவுடன் ஒருவர் கைது!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1ஆம் வட்டாரப்பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 24-11-23அன்று. பொலீசார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீட்டிற்குள் பொதிசெய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பொதி கஞ்சாவினை மீட்டுள்ளார்கள் 1.5கிலோ நிறைகொண்ட கஞ்சா பொதிகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதுடன் இந்த செயற்பாட்டுடன் தொடர்புடைய 37 அகவையுடைய குடும்பஸ்தரை கைது செய்துள்ளார்கள்
சந்தேகநபரையும் சான்று பொருட்களையும் இன்று 25-11-23 முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுளளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *