Sunday, June 29, 2025
HomeMULLAITIVUமுல்லைத்தீவினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம்!

முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் குற்றப் பின்னணி உள்ள சிங்களர்கள் இருவர் உட்பட மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற போது தனுஷ்கோடி அடுத்து நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர காவல் படை வீரர் கைது செய்து மரைன் பொலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற பின்னணி கொண்ட நபர்கள் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்று வருகின்றனர்.

சட்டவிரோத ஊடுருவலை கண்காணித்து தடுக்கும் நடவடிக்கையில் இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இலங்கையைச் சேர்ந்த குற்ற பின்னணி உள்ள சிலர் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று நள்ளிரவில் இருந்து தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தனுஷ்கோடி அடுத்த நான்காம் மணல் திருட்டு சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் நிற்பதை கண்ட இந்திய கடலோர காவல் படையினர் மணல் திட்டிற்கு சென்று பார்த்தபோது இலங்கை சேர்ந்த சிங்கள மொழி பேசிய இருவர், இலங்கை தமிழர் ஒருவர் என மொத்தம் மூன்று பேரை சோதனை செய்ததில் அவர்களிடம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் இலங்கை பணம் 46,000 உள்ளிட்டவைகள் இருந்தது தெரியவந்ததையடுத்து மூவரையும் கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து மரைன் பொலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த இலங்கை தமிழர் கபிலன் (34), நீர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த சுமித் ரோலன், பெர்னாண்டோ (43), மாதவிலக்கை சாகர குணதிலக (33) ஆகிய இரண்டு சிங்கள இனத்தவர்கள் என மூன்று இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் இரவு 9 மணிக்கு மன்னார் மாவட்டம் பேச்சாளையிலிருந்து படகு மூலம் தலா 2 லட்சம் செலுத்தி இன்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்த நான்காம் மணல் திட்டத்தில் வந்து இறக்கியதாகவும், தமிழகத்திற்குள் ஊடுருவி பின் இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இலங்கை தமிழர் கபிலன் ஐஸ் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்து தற்போது பிணையில் இருப்பதாகவும், சிங்கள இனத்தவர்கள் இருவர் மீதும் குற்றப் பின்னணி மற்றும் நிழல் உலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உடன் தொடர்பில் இருந்து வரும் நிலையில் இலங்கையில்

“கிளீன் ஸ்ரீலங்கா” என்ற திட்டத்தின் கீழ் கொலை கொள்ளை மற்றும் போதை பொருள் வழக்குகளில் தொடர்புடைய நபர்களை கைது செய்து கடுமையான தண்டனை விதித்து வருவதால் இலங்கையில் உள்ள குற்ற பின்னணி மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதாக இலங்கை பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ முயன்ற குற்ற பின்னணி உள்ள மூவர் நான்காம் மணல் திட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நிகழ்வு கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே குற்றப் பின்னணி உள்ள இமானுவேல் முஸ்ஹப் மற்றும் அஜித்தன் ஆகிய இருவர் கடல் வழியாக கடந்த சனிக்கிழமை படகில் புறப்பட்டு தமிழகம் வர இருந்த நிலையில் இருவரையும் இலங்கை கடற்படை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது..

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments