Sunday, June 29, 2025
HomeMULLAITIVUவெகனர் காரில் கஞ்சா கடத்தல் யுவதி சிறைச்சாலை இளைஞன் தடுத்துவைத்து விசாரணை!

வெகனர் காரில் கஞ்சா கடத்தல் யுவதி சிறைச்சாலை இளைஞன் தடுத்துவைத்து விசாரணை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெகனர் காரில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் யுவதி உள்ளிட்ட இருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைது செய்துள்ளார்கள்

  .
யாழ்ப்பாணத்தில் இருந்து விற்பனைக்காக எடுத்து வரப்பட்ட 550 கிராம் கஞ்சா 160 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும்  புதுக்குடியிருப்பு பொலீசாரால் செய்யப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த (28.06.2025) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்..
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியின சேர்ந்த 23 அகவையுடைய யுவதி மற்றம் இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலீசார்கள் அவர்கள் இருவரும் காதலர்கள் என்று தெரியவந்துள்ளதுடன் பிரதான சந்தேக நபராக குறித்த இளைஞனுக்கு 550 கிராம் கஞ்சா கடத்தியகுற்றச்சாட்டிலும் மற்றை சந்தேக நபரான யுவதிக்கு 160 மில்லிக்கிராம் ஐஸ் கடத்திய குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டு

29.06.25 இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய உத்தியோகத்தர் ஐனனன் இவர்கள் மீது சந்தோகம் கொண்டு மேலும் தடுத்துவைத்து விசாரிக்க மன்றிடம் அனுமதி கோரியுள்ளார்.

அதன் படி மூன்று நாட்கள் குறித்த இளைஞனை பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க மன்று அனுமதி வழங்கியுள்ளதுடன்  08.07.2025 வரை குறித்த யுவதியினை யாழ் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments