Sunday, June 29, 2025
HomeMULLAITIVUஒட்டுசுட்டான் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் திறந்துவைக்கப்பட்ட தாகசாந்தி நிலையம்!

ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியால் திறந்துவைக்கப்பட்ட தாகசாந்தி நிலையம்!

வடக்கில் வரலாற்று சிறப்பு மிக்க
தான்தோற்றிய ஈஸ்வரங்களில் ஒன்றான   முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இன்னிலையில் ஆலயத்திற்கு வரும் பக்த்தர்களின் தாக சாந்தியினை நிறைவேற்றிக்கொள்ள மறைந்த தாய் மற்றும் சகோதரர் நினைவாக கருவேலன் கண்டல் ஒட்டிசுட்டானை சேர்ந்த எதிர்வீரசிங்கம் புஸ்பராணி அவர்களினால் நிர்மானிக்கப்பட்ட தாகசாந்தி நிலையம் ஒட்டுசுட்டான் பொலீஸ் நிலையபொறுப்பதிகாரி கே.வவுணசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தினர் கிராம சேவையாளர்கள் பக்த்தர்கள் உள்ளிட்ட அறநெறி பாடசாலை மாணவர்கள் என நிகழ்வில் பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

16 நாட்கள் திருவிழாவினை கொண்ட ஆலய திருவிழாவின் கொடிஏற்ற ல் திருவிழா கடந்த 25.06.2025 அன்று கொடிச்சீலை கற்சிலைமடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு பூசை வழிபாடுகளை தொடர்ந்து ; கொடியேற்றம் சிறப்புற நடைபெற்றுள்ளது.

07.07.2025 வேட்டைத்திருவிழாவும்,08.07.2025 சப்பரத திருவிழாவும் 09.07.2025 தேர்த்திருவிழாவும் சிறப்புற நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments