Saturday, June 28, 2025
HomeMULLAITIVUயோகாசன பயிற்சியின் ஒராண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்!

யோகாசன பயிற்சியின் ஒராண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்!

முல்லைத்தீவு மாவட்டத்தினன பூர்வீகமாகக் கொண்ட தற்போது பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் பிரபல யோகா பயிற்சி ஆசிரியர் அல்பிரட் விக்டர் டலஸ் அவர்கள் பத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம்  ஊடாக யோகா பயிற்சியை நடத்தி வருகிறார்

இந்நிலையில் முல்லைத்தீவிலிருந்து பயிற்சி பெற்று வந்த மாணவி செல்வி ஜே.ருபேன்ஷா ஓர் ஆண்டை பூர்த்தி செய்த நிலையில் ஓராண்டு பூர்த்தி நிகழ்வும் குறித்த மாணவிக்கான பட்டமளிப்பு நிகழ்வும் இன்று(28) முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது 

விருந்தினர்கள் வரவேற்போடு இடம்பெற்ற இந்த நிகழ்வில் குறித்த மாணவியின் அரங்கேற்ற நிகழ்வும் அவருக்கான கௌரவிப்பு நிகழ்வும் ஆசிரியருக்கான கௌரவிப்பு நிகழ்வும்  அத்தோடு குறித்த ஆசிரியருக்கான பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கின்ற நிகழ்வும் இடம்பெற்றது 

குறித்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய நிர்வாக உத்தியோகத்தர் ரெஜிஸ் விமலேந்திரன் முல்லைத்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் மகளிர் பாடசாலை அதிபர் அருட் சகோதரி ரி.வெனிகலாமேரி உள்ளிட்ட  அதிதிகள் கலந்து கொண்டு குறித்த மாணவி மற்றும் ஆசிரியரை கௌரவித்தனர்

நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த புத்திஜீவிகள் கலை அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments