கரப்பந்தாட்டத்தில் மாகாணத்தில் முதலிடம்பெற்ற கலைமகள் வித்தியாலய பெண்கள் அணியினர் நேரில் சென்று வாழ்த்தினார் ரவிகரன் எம்.பி
பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் முதலிடத்தைப்பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு – முள்ளியவளை, கலைமகள் வித்தியாலய பெண்கள் அணியினரை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 14.07.2025இன்று நேரில் சென்று வாழ்த்தினார். குறிப்பாக 16வயது மற்றும் 18வயது பெண்கள் அணியினரையே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு நேரில்சென்று வாழ்த்தியுள்ளார்.
அத்தோடு போட்டிகளில் பங்கேற்கும்போது எதிர்கொள்ளும் சிக்கல் நிலமைகள் மற்றும் சவால்கள் குறித்தும் வீராங்கனைகளிடமும், பயிற்றுவிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபரிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது கேட்டறிந்துகொண்டதுடன் அந்தச் சிக்கல் நிலமைகள், சவால்களைத் தீர்ப்பதற்கு தம்மாலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.
