முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு குளத்தை அண்மித்த காட்டுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று இனம் காணப்பட்டுள்ளது
உயிரிழந்து 3 நாட்கள வரை கடந்த நிலையில் குறித்த யானையின்உடலம் காட்டுக்குள் இனம் காணப்பட்டது யானை உயிரிழப்பு தொடர்பாக கிராம சேவகருக்கு மக்கள் வழங்கப்பட்ட முறைப்பாட்டு அமைப்பாக வனஜீவராசிகள் திணைக்களம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்
யானை உயிரிழப்பு தொடர்பாக நாளை 21.08.23 வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு யானையின் உடலாம் அடக்கம் செய்யப்பட உள்ளதுடன் யானை உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை புது குடியிருப்பு போலீசார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றார்கள்சுமார் 20 வயதுடைய யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது