Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: October 2023

புதுக்குடியிருப்பில் தமிழ்இராணுவ வீரன் கஞ்சா அடித்துவிட்டு கொலைசெய்தார்!

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு மயில்குஞ்சன் பகுதியில் தமிழ் இராணுவ வீரன் ஒருவரால் அவரது உறவினர் ஒருவர் அடித்து படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 67 அகவையுடைய தம்பிப்பிள்ளை மார்க்ண்டு என்பவர் அடித்து படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் 28.10.2023 அன்று இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.கேப்பாபிலவு இராணுவ முகாமில் மெக்கானிக்கல்…

புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 68 அகவையுடையகுடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 28.10.2023 அன்று இரவு 11.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.இந்த கொலை சம்பத்தினை செய்த மயில்குஞ்சன் குடியிருப்பு கைவேலியில் வசித்துவரும் 31 அகவையுடைய இராணுவத்தில் பணியாற்றும் நபர் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மதுபாவனை…

முள்ளியவளை பகுதியில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!

14 அகவை சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் இருவர் கைது! முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் 14அகவை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…

மனைவியினை கொலைசெய்த கணவன் விளக்கமறியலில்!

மனைவியினை கொலைசெய்த கணவன் விளக்கமறியலில்! முல்லைத்தீவு நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் வாடகைவீட்டில் தங்கியிருந்த இளம் குடும்ப பெண்ணான 22அகவையுடைய ஞானசீலன் கீதாஞ்சலியினை கணவனான 23 அகவையுடைய குற்றவாளி கொலைசெய்து மலசலகூட குழிக்கு அருகில் புதைத்துள்ள நிலையில் நேற்று 24.10.23 அன்று உடலம் மீட்கப்பட்டுள்ளது. மகளை காணவில்லை என தயாரால் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டிற்கு…

 மனைவியை கொலை செய்து  புதைத்த இளம் குடும்பத் தலைவன் கொழும்பில் கைது!

முள்ளியவளையில் மனைவியை கொலை செய்து  புதைத்த இளம் குடும்பத் தலைவன் கொழும்பில் கைது பெண்ணின் உடலம் மீட்பு.. முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்பத்தினை காணவில்லை என உறவினர்களினால் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு காணாமல் போன இளம் குடும்பத்தின் காணாமல் போன பெண்ணின் தயாரால்  23.10.2023 இன்று…

முள்ளியவளையில் இளம் குடும்பத்தினை காணவில்லை!

முல்லைத்தீவு முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வசித்த இளம் குடும்பத்தினை காணவில்லை என உறவினர்களினால் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு காணாமல் போன இளம் குடும்பத்தின் காணாமல் போன பெண்ணின் தயாரால்  23.10.2023 இன்று முறையிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாராத்தில் வசிக்கும் குறித்த தயார் தனது மகள் மூன்று ஆண்டுகளுக்கு…

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமமான பணிகள்

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் 22.10.2023 சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.   இவ் சிரமமான பணியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்டார்.  இதன்  போதும்  மாவீரர் நாள் தொடர்பாக  ஊடகங்களுக்கு அவர் கருத்துக்கள் தெரிவித்தார்  எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி மாவீரர் நாள்…

புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையம் யார்கையில்!

போதைப்பொருளை ஒழிக்க தகவல்களை தாருங்கள் இரகசியம் பேணப்படும் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தெரிவித்தார். கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாகஜனசபா அங்குராப்பண நிகழ்வு (21.10.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,மேலும் கருத்து தெரிவிக்கையில்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட…

புதுக்குடியிருப்பில்-ஜனசபா அங்குராப்பண நிகழ்வு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில்  கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் முகமாக ஜனசபா அங்குராப்பண நிகழ்வு (21.10.2023) காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள அமைப்புக்களையும் ஏனைய இளைஞர் , யுவதிகளையும் உள்வாங்கி ஜனசபா செயற்குழுவில் 25 அங்கத்தவர்கள்…

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய சுறா!

முல்லைத்தீவு – அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சுறா ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். (21.10.2023) முல்லைத்தீவு அளம்பில் கடற்கரையில் 15 அடி நீளமுடைய சுறா ஒன்றே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்கரையில் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கிய…