Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

#Police #Mullaithivu #News #Tamil

வரலாற்று சிறப்பு மிக்க காட்டுவிநாயகர் ஆலயம் மகாகும்பாபிஷேகம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முள்ளியவளை பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 14.03.2024 அன்று தொடங்கிவைக்கப்படவுள்ளது. வெள்ளைக்கை நாச்சியாரால் வழிபட்டதும் பரராசசேகர மன்னரால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுமான முள்ளியவளை காட்டுவிநாயகப்பெருமானுக்கு ஒன்பது தளங்கள் கொண்ட இராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு புனருத்தாபன பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற ஏற்றபாடாகியுள்ளது. முல்லைத்தீவு…

சிறப்பாக இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வும் வினாடி வினா போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் !

மகளிர் தினத்தை முன்னிட்டு  கொமர்ஷல் வங்கியினால் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் சர்வதேச மகளிர் தின நிகழ்வும் இன்று (13) முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது மகளிர் தினத்தை முன்னிட்டு கொமர்ஷல் வங்கி முள்ளியவளைக் கிளையினால்  முல்லைத்தீவு கல்வி வலயத்துடன் இணைந்து வினாடி வினா போட்டி ஒன்றினை கடந்த…

முறிப்பு குளத்தின் அலகரைப்பகுதியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு!

முல்லைத்தீவு முள்ளியவளை கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள கணுக்கேணி குளம் முறிப்பு பகுதியில் அமைந்துள்ளது இதனை முறிப்பு குளம் என்று எல்லோராலும் பேசப்பட்டு வந்துள்ளது. இந்த குளத்தின் அலகரைப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வாளர்களால் தொடர்ச்சியாக மணல் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.இவ்வாறு மணல் அகழ்வதால் குளத்தின் அலகரை பகுதியில் பாரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் போக்வுரத்து செய்யமுடியாத நிலையில்…

மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி!  

சமூக சேவைகள் திணைக்களமும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான  உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று (12) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன்  அவர்களின் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக  நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை  சேர்ந்த வீரர்கள், சமூக…

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்து!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர். குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய தினமும்…

புதுக்குடியிருப்பில் சைக்கில் திருடனை கைதுசெய்த பொலீசார்!

புதுக்குடியிருப்பில் துவிச்சக்கரவண்டி திருட்டுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் சிவராத்திரி தினத்தன்று கந்தசாமி கோயிலுக்கு வந்த பக்தருடைய துவிச்சக்கரவண்டி பகல் 12 மணியளவில்  திருடப்பட்டுள்ளது. இதனையடுத்து துவிச்சக்கரவண்டி உரிமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய…

முள்ளியவளை பொலீசாரின் வாகனம் தடம் புரண்டது!

முள்ளியவளை பொலீசாரின் வாகனம் தடம் புரண்டது! முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் நிலையத்துக்குரிய பொலீஸ் வாகனம் ஒன்று ஒட்டி சுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு உள்ளது11-03-24 இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற பொலீஸ் வாகனம் மீண்டும் மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் நோக்கி…

பழைய கண்டிவீதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி! முல்லைதீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கி பற்றி உள்ளது. கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி 62 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாங்குளம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்த…

விஜயாலயன் அறக்கட்டளையினால் மாலை நேர கல்வி  நிலையம்!

கூழாமுறிப்பு  பகுதியில் மாணவர்களுக்கான இலவச கற்றல் நிலையம் ஆரம்பித்து வைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கோடு விஜயாலயன் அறக்கட்டளையினால் இன்றைய தினம் (10.03.2024)  மாணவர்களுக்கான இலவச மாலை நேர கல்வி  நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது முள்ளியவளையை  சேர்ந்த கனடா நாட்டின் பொலிஸ் அதிகாரியாக  கடமையாற்றி…

மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வு!

உதயசூரியன் விளையாட்டு கழகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வானது இன்று உதயசூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று (09.03.2024) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. விருந்தினர்கள் வரவேற்று அழைத்துவப்பட்டதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் அறிமுகம் இடப்பெற்றதுடன், குழுப்படம்…