Tuesday, July 15, 2025
HomeMULLAITIVUதுணுக்காய் பிரதேச சபை தவிசாளராக தமிழரசு கட்சி செந்தூரன் தெரிவு!

துணுக்காய் பிரதேச சபை தவிசாளராக தமிழரசு கட்சி செந்தூரன் தெரிவு!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்கான தவிசார் உபதவிசாளர் தெரிவு இன்று(26-06-2025) பகல் நடைபெற்றுள்ளது

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் பகல் 11-30 மணிக்கு துணுக்காய் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது

13 உறுப்பினர்களைக் கொண்ட இச்சபையில் தமிழரசு கட்சி சார்பில் கனகரத்தினம் செந்தூரன் அவர்களும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் சிவ குமார். சிந்துஜன் ஆகியோரின் பெயர்கள் தவிசாளர்களாக முன்மொழிக்கப்பட்ட நிலையில் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது

இதன் போது தேசிய மக்கள் சக்தி சார்பில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஒருவரும் சுயேட்சைக்குழுவின் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட உறுப்பினர் ஒருவரும் நடுநிலமை வகிக்க தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட கனகரத்தினம் செந்தூரன் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஒரு உறுப்பினரும் சுயேட்சைக்குழு கங்காரு சின்னத்தில் வெற்றி பெற்ற ஒரு உறுப்பிரினதும் ஆதரவுடன் 06 வாக்குகளையும் சி. சிந்துஜன் 05 வாக்குகளையும் பெற்று தமிழரசு கட்சி சார்பில் கனகரத்தினம் செந்தூரன்தவிசாளராக தெரிவு செய்ய ப்பட்டுள்ளார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments