Monday, June 23, 2025
HomeMULLAITIVUமரண அறிவித்தல் அந்தோனிப்பிள்ளை இருதயநாதர் (ஓய்வுநிலை அதிபர்)!

மரண அறிவித்தல் அந்தோனிப்பிள்ளை இருதயநாதர் (ஓய்வுநிலை அதிபர்)!

முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை இருதயநாதர் (ஓய்வுநிலை அதிபர்) 11.06.2025 அன்று அயர்லாந்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுவானி அந்தோனிப்பிள்ளை, செபமாலை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து, மரியஞானசௌந்தரி தம்பதிகளின் அன்பு மருமகனும், மரியஞானமலரின் அன்புக் கணவரும், அன்றூ நிதர்சன் (வைத்தியர் – அயர்லாந்து), ஆன் அர்ச்சனா (ஆசிரியை – மு/ அம்பலவன் பொக்கணை மகா வித்தியாலயம்), இவான் சந்துரு (கனிஷ்ட கணக்காய்வாளர் WSK – கொழும்பு) ஆகியோரின் அன்புத்தந்தையும், மெகன் (வைத்தியர் – அயர்லாந்து), யனோச் (ஆசிரியர் – மு/ புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும், எலனோறா, மக்டாரா (அயர்லாந்து), அஸ்விதா ஆகியோரின் அன்புப் பேரனும், புஸ்பத்திரேஸ், அருட்சகோதரி மரியராணி (திருக்குடும்ப கன்னியர் மடம் பண்டிவிரிச்சான்), பற்றிமாறோஸ் (கனடா), பத்திநாதர் (சுவிஸ்), இலங்கநாதர் (கனடா), யோகநாதர் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஞானப்பிரகாசம், அன்ரன் (கனடா), ஜெயராணி (சுவிஸ்), ஜெயந்தி (கனடா), மேரி றெஜினா (சுவிஸ்) மற்றும் பிலோமினா, காலஞ்சென்ற மேரி மாகிறேற், பொலின் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற மரியதாசன், ஜெயா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள் 24.06.2025 செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் காலை 10:00 மணிக்கு முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் இரங்கல் திருப்பலியைத் தொடர்ந்து பூதவுடல் முல்லைத்தீவு உண்ணாப்புலவு கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

மேலதிக தொடர்புகளுக்கு
இவான் சந்துரு (மகன்) – +94 (76) 526 3650

யனோச் (மருமகன்) – +94 (77) 970 6615

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments