வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்றைய தினம் (23) காலை முதல் இன்றைய தினம் (24) அதிகாலை வரை சிறப்பாக நடைபெற்றது
நேற்றைய தினம் கலை முதல் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றதோடு இரவு வேளையில் நாகதம்பிரான் உள்வீதி வெளிவீதி வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்
வரலாற்றுச்சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தினை ஒட்டி நாடுபூராவும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்