பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமிழரசு கட்சியில் வகித்துவந்த மாவட்ட கிளையின் செயலாளர் பதவி மற்றும் பிரதேச கிளையின் தலைவர் பதவி ஆகியவற்றை இன்றையதினம் ராஜினாம செய்வதாக கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது, ,
அதற்கான காரணங்களாக தற்போது நடந்துமுடிந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் முல்லைதீவில் தமிழரசுகட்சி ஆட்சி அமைப்பதற்கான தவிசாளர் தெரிவில் மாவட்டகிளையின் முடிவுகளை பொருட்படுத்தாமல் கட்சியின் பதில் தலைவரின் தலையீடும் பொதுசெயலாளரின் தலையீடும் காரணமாக தன்னிச்சையாக செயற்படமுடியாத காரணத்தினாலும், பதவிநிலைகளில் இருப்பதால் மக்களுக்கான பணிசெய்வதில் சிரமங்கள் ஏற்படுவதனால் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது