பனையின் பொருளாதாரத்தை மையப்பொருளாக கொண்டு
ஒளிரும் சூரியன் மாதாந்த பத்திரிகை வெளியீடு.
பனை தமிழர்களின் சொத்து அதன் அனைத்து பகுதிகளும் மானிடர்க்கு பயனளிக்கின்றன இந்த நிலையில் பனை வளம் வடக்கில் அழிந்து வருகிறது..
இன்னிலையில்
கிளிநொச்சி ஜெயந்திபுரம் சிவனருள்இல்லத்தில் 25.06.2025 இன்று பனையின் பொருளாதாரத்தை மையப்பொருளாக கொண்டு
ஒளிரும் சூரியன் மாதாந்த பத்திரிகை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது
இன்று காலை 10 மணிக்கு சம்ரதாய நிகள்வுகள் நடைபெற்று பத்திரிகையின் பிரதம ஆசிரியர்
ஓற்வுநிலை விரிவுரையாளர் திரு பார்த்தீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க கிளிநொச்சி பனை அபிவிருத்திச் சபை முகாமையாளர் திரு வீ.பார்த்தீபன் பெற்றுக்கொண்டார் கிளிநொச்சி இந்துக்கல்லுரி அதிபர் திருமதி இ.மீனலோயினி தலைமயில் நடைபெற்ற நிகழ்வில்
கிளிநொச்சி பனை அபிவிருத்திச் சபை முகாமையாளர் திரு வீ.பார்த்தீபன் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார் கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி தமிழ்சங்க நிறுவுனர் வேலுப்பிள்ளை இறைபிள்ளை அவர்கள் மற்றும் ஆசிரியரும் கலைப் படைப்பாளியுமான சாந்தனுர் அப்பன் நிகழ்வில் வெளியீட்டு உரையை பத்திரிகை முகாமையாளர் திரு வீ.சக்திவேல்
ஆற்ற ஏற்ப்புரயை ஓற்வுநிலை விரிவுரையாளர் திரு பார்த்தீபன் அவர்கள் ஆற்றினார்.
நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்திவைத்தார் ஓய்வுநிலை அதிபர் மட்டக்களப்பு திரு தேவச்சந்திரா அவர்கள். தொடர்ந்து சுயதொழில் ஊக்குவிப்பளர்கள் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றது.

