மணற்குடிருப்பு முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் முள்ளிவாய்க்கால் கிழக்கு முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு – அந்தோனி அன்ரன் 26.06.2025 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார்
காலம் சென்ற எஸ்தாக்கி – அருளப்பு மரியப்பிள்ளை (பிலிப்பாச்சி) ஆகியோரின் பாசமிகு மகனும்
மரியாம்பிள்ளை சவினம்மா அவர்களின் மருமகனும்
காலம் சென்ற லூர்து நாயகம் (ராசா) காலம் சென்ற பிலோமினா (தங்கமணி), காலம் சென்ற மேரிபிரான்சிஸ் (ஐயாமணி), காலம் சென்ற லூசியா (மூத்தா) , ஜசிந்தா (சின்னா) , காலம் சென்ற ஜீவரட்ணம் (ஜீவா) , அன்ரனியேசுரட்ணம் (சந்திரா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
மரிய றீட்டா (இந்தியா)அவர்களின் அன்புக்கணவனும்
பத்திநாதர் இருதயமேரி
பர்ணபாஸ் பிலோமினா
அருள் நாதர் மரியா
இராமச்சந்திரன் ஆரோக்கிய நாயகி
நேசரட்ணம் மரியநாயகி
தேவராஜா கிளி ஆகியோரின் மைத்துனரும்
ஜெபானந்தன் (பிரான்ஸ்), நித்தியானந்தன்(லண்டன்), யூட் ஆனந்தன்(பிரான்ஸ்), யூடிற் அனித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும்
ஆன் சாரா, அர்சின் டிஷானி, யூட்ஸ் பிரதீபன் ஆகியோரின் மாமனாரும்
யூலினா, ஜெய்னிஸ், ஜொய்னா, காலம் சென்ற செழியன் , யோசுவா, ஜோயல், யுவின்,மகிழினி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரி பூதவுடல் 27.06.2025 வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் கிழக்கில் அமைந்திருக்கும் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்டு மதியம் 3.00 மணிக்கு புனித இராயப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு உண்ணாப்பிலவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்- குடும்பத்தினர்
