புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் வைரவர் கோவிலுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வரை புதுக்குடியிருப்பு பொலீசார் 26.06.2025 இன்று மாலை கைதுசெய்துள்ளார்கள்.
குறித்த பகுதியில் ஒருகுழு புதையல் தோண்டப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணைகளை நடத்தி குறித்த நால்வரையும் கைதுசெய்துள்ளர்கள்.
குறித்த பகுதி போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்த பகுதியாக காணப்படுவதால் விடுதலைப்புலிகள்காலத்தில் குறித்த பகுதியில் தங்கம் புதைத்து வைத்திருப்பதாக நம்பி தோண்டும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் மீசாலை,கிளிநொச்சி உருத்திரபுரம், பெரியபரந்தன்,கிளிநொச்சி, பகுதிகளை சேர்ந்த நால்வரையே புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துளு;ளார்கள். இவர்கள் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளது
சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.