இன்று (21.09.2023) முல்லைத்தீவு மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட யோகபுரம் மகாவித்தியாலயத்தின் தரம் 10, 11, மற்றும் உயர்தர மாணவர்களுக்கான சவால்களை எதிர்கொண்டு வழப்பழகுதல் என்னும் தொனிப்பொருளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது மாணவர் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் மாணவர்கள் தமது மன அழுத்தங்களை எவ்வாறு கையாளவேண்டும் எனவும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஏற்றதான சாதகமான சூழலை எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும் என இதன்போது தெளிவூட்டப்பட்டது.
![](https://mullaivoice.com/wp-content/uploads/2023/09/380290748_745957000875459_1245120642540891387_n-1.jpg)
![](https://mullaivoice.com/wp-content/uploads/2023/09/379467350_745957294208763_8523774838532825129_n.jpg)
![](https://mullaivoice.com/wp-content/uploads/2023/09/379467350_745957294208763_8523774838532825129_n.jpg)
![](https://mullaivoice.com/wp-content/uploads/2023/09/380280313_745957270875432_2643539422878532733_n-1-1024x768.jpg)