Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முள்ளியவளையில் கஞ்சாவுடன் இருவர் கைது!

முள்ளியவளை தண்ணீரூற்று பகுதிகளில் காஞ்சா வாடிக்கையாளர்களிடம் கஞ்சா பாவனை அதிகரித்து வருவதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முள்ளியவளை பொலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 16.06.23 நேற்று மாலை கஞ்சாபாவனையில் ஈடுபட முயன்ற இதுவரை கைதுசெய்துள்ளார்கள்.

ஹிச்சிராபுரம்,மாமூலைப்பகுதிகளில் குஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இருவரை கைதுசெய்துள்ளார்கள்.

ஹிச்சிராபுரம் பகுதியில் வயோதிபர் ஒருவர் மூன்று கிராம் கஞ்சாவினை தனது பயன்பாட்டிற்காக வைத்திருந்தவேளை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன அதேபோல் மாமூலைப்பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கஞ்சா அடிப்பதற்காக உடமையில் கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் .

இவர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலீசார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அதேவேளை முள்ளியவளை தண்ணீரூற்று,மாமூலை,ஹிச்சிராபுரம் பகுதிகளில் கஞ்சா வியாபாரிகளின் வியாபார நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள் வியாபாரிகள் இருக்கும் வரையும் வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்வார்கள் வியாபாரிகளை இனம் கண்டு அவர்களை கைதுசெய்யவேண்டும் என்பது மக்களின் கருத்தாக அமைகின்றது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *