Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் மலசல குழியில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள்!

08.07.23 இன்று மாலை முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் உள்ள தனியார் காணிஒன்றில் உள்ள மலசல குழியினை துப்பரவு செய்யும் போது அதில் இருந்து வெடிபொருட்கள் சில இனம் காணப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் காணியின் உரிமையாளர் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலீசார் குழியினை பார்வையிட்டு அடையாளப்படுத்தியுள்ளதுடன் பொலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளார்கள்.

சம்பவம் குறித்து எதிர்வரும் திங்கட் கிழமை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு குறித்த வெடிபொருட்களை அகற்றும் நடவடிக்கை இடம்பெறும் என முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

மலசல குழியில் கைக்குண்டுகள் மற்றும் எறிகணை வகை வெடிபொருட்கள் இனம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *