Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

மனிதபுதைகுழி குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரரணகள் நாளை முல்லைத்தீவு நீதிமன்றில்!

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரரணகள் நாளை முல்லைத்தீவு நீதிமன்றில்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் இனம் காணப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நாளை 08.08.23 முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 20.07.23 அன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மனித புதைகுழி தோண்டுவது தொடர்பில் தொல்பொருள் திணைக்களம் அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில் 08.08.23 திகதியிடப்பட்டு அன்று கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு விசாரணையின்போது குறித்த மனித புதைகுழியினை தோண்டுவதாஅல்லது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தொல்பொருள் திணைக்களம் மன்றிற்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குருந்தூர்மலையில் தமிழ் மக்கள் வழிபாட்டினை பொலீசார் தடைசெய்தமை மற்றும் நீதிமன்ற உத்தரவினை மீறி பௌத்த வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பான வழக்கு விசாரணையும் நாளை 08.08.23 முல்லைத்தீவு மாவட்ட நீpதமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *