Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த முக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவரை வீதிபோக்குவரத்து பொலீசார் கைதுசெய்து பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளார்கள்.

வீதி போக்குவரத்து விதிகளை மீறியகுற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வீதிபோக்குவரத்து பொலீசாரான் கடமைக்கு இடையூறு விளைவித்தமைக்காக இவரை கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் வீதிபோக்குவரத்து பொலீசார் கடமையின் நிமித்தம் வீதியால் செல்பவர்களை சோதனை செய்தபோது இவர் வீதிபோக்குவரத்து பொலீசாருக்கு இடையூறு விளைவித்துள்ளார்.இந்த சம்வத்தின் போது பொலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட இவரை வீதிபோக்குவரத்து பொலீசார் கைதுசெய்து புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *