Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

இறந்த நிலையில் யானை ஒன்று ஒட்டன்குளம் விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் மீட்பு!

இறந்த நிலையில் யானை ஒன்று ஒட்டன்குளம் விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு விநாயகர்புரம் மனமஞ்சான் பகுதியில் கிராம மக்களால் இறந்த நிலையில் குறித்த யானை அடையாளம் காணப்படுள்ளது

வயலுக்கு சென்ற விவசாயிகள் கிராம அலுவலருக்கு வழங்கிய தகவலை அடுத்து , ஒட்டு சுட்டான் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு குறித்த சம்பவம் தொடர்பில் கிராம அலுவலரால் அறிவிக்கப்பட்டுள்ளது

குறித்த யானை பெண்யானை எனவும் , 6 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட 15-20 வரையிலான வயதினை கொண்டதெனவும் , குறித்த யானையின் பின் வலக்கால் கண்ணிவெடி தாக்குதலில் சிதைவடைந்து நீண்ட நாட்கள் கானப்படுகின்றதெனவும் , குறித்த யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் நாளை இடம்பெறும் எனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *