Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற செல்வரத்தினம் ஹம்சிகா!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற செல்வரத்தினம் ஹம்சிகா.!

31.05.2024  அன்று  வெளியாகிய கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி மாணவி செல்வரத்தினம் ஹம்சிகா முல்லைத்தீவு மாவட்டத்தில் கலைப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கூழாமுறிப்பு பகுதியில் இருந்து சென்று கல்விகற்று சாதனை படைத்த 

மாணவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்

இதேவேளை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தாங்களும் முன்னுக்கு வர வேண்டும் என்று போராடி வரும் வேணாவில்  கிராமத்தில் வசிக்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி தியாகராசா மோகனப்பிரியா  கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்து   மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *