Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

உடையார்கட்டில் இருந்து மரக்கடத்தலில் ஈடுபட்ட ஹயஸ் வாகனம்-யாழ் சாரதி கைது!

மரம் கடத்திய ஹயஸ் வாகனம் மாணவனை மோதித்தள்ளியது!முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் தேக்கமரக்குற்றிகளை கடத்தி சென்ற ஹயஸ் வாகனம் ஒன்று மாணவன் ஒருவரை மோதி தள்ளி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் நேற்று (02.07.2024) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயர்தர மாணவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்….

உடையார் கட்டில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் உயர்தர மாணவன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் இரவு நேரம் மாலை நேர வகுப்பு முடித்து வீதியால் மிதிவண்டியில் பயணித்த மாணவன் மீது வேகமாக சென்ற ஹயஸ் வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது இதன்போது வகானத்தில் சட்டவிரோதமான…

வீதியினை கடக்க முற்பட்ட சிறுமி வாகனம் மோதி உயிரிழப்பு!

முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி பலி! முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 09 அகவை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(03) மாலை இடம்பெற்றுள்ளது. முள்ளியவளை தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் மாமூலைப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.பட்டா வகை வாகனம் ஒன்றுடன் மோதிய 9 அகவை  சிறுமி உயிரிழந்துள்ளதாக…

சுதந்திரபுரத்தில் குடும்பஸ்தர் கொலை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலைசெய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியின் பிரேதபரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் சுதந்திரபுரம் கொலனி பகுதியினை சேர்ந்த 28 அகவையுடைய நாகரத்தினம் சுயதீபன் என்ற குடும்பஸ்தர் வீட்டில் மயங்கிய நிலையில் நேற்று(02)மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….

33000 what is power மின்இணைப்பிற்கு கிட்ட சென்றால் இழுத்து அடிக்கும்- நடந்த சம்பவம்!

33000 கிலோவாட்ஸ் மின்கம்பிக்கு கிட்ட சென்றால் இழுத்தடிக்கும்!இலங்கை மின்சாரசபையில் மக்களின் மின்சார பாவனைக்காக இணைக்கப்பட்டுள்ள 33000 கிலோ வாட்ஸ் இணைப்பு மின்கம்பிகளுக்கு கிட்ட செல்லும் போது அழு இழுத்து தாக்கும் என்ற விடையம் பலருக்கு தெரியாத நிலையில் புதுக்குடியிருப்பில் இருவர் இவ்வாறு அதியுயர் மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் 26.06.2024 அன்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின்…

ஏ9 வீதியில் விபத்து மூ.வ.ர்.ப.லி -தரித்து நின்றபேருந்துடன் பாரஊர்தி மோதியது!

முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு திருத்த வேலை மேற்கொள்ளப்பட்டிருந்த போது நேற்றிரவு (25-06.2024 ) 12…

முல்லைத்தீவு பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்!

முல்லைத்தீவு நகரப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவனை ஆசிரியர் ஓருவர் சரமானியாக கையால் தாக்குதல் நடத்தியதில் குறித்த மாணவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் இந்த சம்பவம் கடந்த 19.06.2024 அன்று முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது. உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் முல்லைத்தீவினை சேர்ந்த குறித்த…

முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியரை தாக்கிய பெண் ஊழியர் கைது!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பெண் ஊழியர் வருவர் மீது கடந்த 30.05.2024 அன்று மற்றும் ஒரு பெண் ஊழியரால் தாக்குதல் நடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான பெண் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட பெண் ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியளை…

முள்ளியவளை பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 14 அகவை சிறுமி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கா முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றிதெரியவருகையில் 14 அகவையுடை சிறுமி ஒருவர் கடந்த 11.06.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு…

சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம்!

ஊடகவியலாளர்கள்மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம். நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்கள்மீதான தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் மற்றும், அடக்குமுறைகளுக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியமென முல்லைத்தீவு ஊடகஅமையம் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச்சேர்ந்த தம்பித்துரை பிரதீபன் என்னும் ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்டமை மற்றும், அவரின் வீட்டிலிருந்த சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே…