நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை நீக்குவதுடன் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு குழுக்களை நியமித்துள்ளார்.
இன்று அவர் நியமித்த குழுக்கல் மக்கள் பிரச்சினை தொடர்பில்ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்கவுள்ளது.
அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் , நியமிக்கப்பட்டுள்ளார்.எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக சாகல காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் உடனடி ஆய்வினை மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்வு காண்பதற்காக உடனடி யோசனைகளை முன்வைக்கவுள்ளார்கள்.