Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 30 குடும்பங்களுக்கு நுளம்புவலை வழங்கி வைப்பு!

தன்னார்வ தொண்டாற்றும்  இளைஞர்கள் பலர்  இணைந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 30 குடும்பங்களுக்கு நுளம்புவலை வழங்கி வைப்பட்டுள்ளது

விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஊடாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இந்திரன் றஞ்சிதமலர்    

தம்பதிகளின் 6000 ரூபா நிதி பங்களிப்பில்  முல்லைதீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  30  குடும்பங்களுக்கு நுளம்பு வலை வழங்கும் நிகழ்வு  23.01.2024   இடம்பெற்றது 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கரிப்பட்டமுறிப்பு மற்றும் பனிக்கன்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 30 குடும்பங்களுக்கான நுளம்பு வலைகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இ.றமேஸ் கிராம அலுவலர் த.தனபால்ராஜ் விதையனைத்தும் விருட்சமே உறுப்பினர்கள் இணைந்து மக்களுக்கு வழங்கி வைத்தனர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *