Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News வவுனியா

வவுனியா ஆலங்குளம் பிள்ளையார் முன்பள்ளி கட்டிடம் அமைத்துக்கொடுப்பு!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள ஆலங்குளம் பிள்ளையார் முன்பள்ளி கட்டிட வசதி இல்லாத நிலையில் இயங்கிவந்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் நிலம் மக்கள்  அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்தோரின் நிதிப்பங்களிப்புடன் முன்பள்ளிக்கான  கட்டிடம் அமைத்து முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

ஆலங்குளம் கிராமத்தினை சேர்ந்த 22 மாணவர்கள் கல்விகற்று வரும் இந்த முன்பள்ளிக்கான கட்டிடங்கள் அமைத்து கையளிக்கும் நிகழ்வு 28.11.23 இன்று நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கிராமசேவையாளர் கல்வி வலயத்தினை சேர்ந்த அதிகாரிகள் முன்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்நிலம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளதுடன் 5இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட முன்பள்ளிக்கான கட்டிடத்தினையும் முன்பள்ளி நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *