முள்ளியவளை காட்டு விநாயகர்ஆலய மஹா கும்பாபிசேகம் 20.03.2024!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க ; முள்ளியவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 14.03.2024 அன்று கர்மாரம்ப கிரியைகளுடன் தொடங்கி சிறப்புற நடைபெற்று வருகின்றது. வெள்ளைக்கை நாச்சியாரால் வழிபட்டதும் பரராசசேகர மன்னரால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதுமான முள்ளியவளை காட்டுவிநாயகப்பெருமானுக்கு ஒன்பது தளங்கள் கொண்ட இராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு புனருத்தாபன பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் எதிர்வரும் 20ஆம்…
பழைய கண்டிவீதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
முல்லைத்தீவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி! முல்லைதீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கி பற்றி உள்ளது. கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி 62 அகவையுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாங்குளம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்த…
விஜயாலயன் அறக்கட்டளையினால் மாலை நேர கல்வி நிலையம்!
கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களுக்கான இலவச கற்றல் நிலையம் ஆரம்பித்து வைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கோடு விஜயாலயன் அறக்கட்டளையினால் இன்றைய தினம் (10.03.2024) மாணவர்களுக்கான இலவச மாலை நேர கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது முள்ளியவளையை சேர்ந்த கனடா நாட்டின் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றி…
வவுனியா ஊடகவியலாளர் ,பூசாரி கைது!
வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை! இன்று (08) இடம்பெறும் மகா சிவராத்திரி பூசைக்காக நேற்று (07) மாலை வெடுக்குநாறி மலைக்கு பொருட்களை கொண்டு சென்ற ஆலய பூசகர் மதிமுகராஜா மற்றும் அவரோடு சென்ற ஊடகவியலாளர் கலைச்செல்வன் ஆகிய இருவரும் நெடுங்கேணி பொலிசாரால் அழைத்து செல்லப்பட்ட நிலையில் நெடுங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்…
வெடுக்குநாறிமலையில் கடும் பாதுகாப்பு-5கிலோமீற்றர் நடக்கவைத்த பொலீசார்!
வவுனியா வெடுக்குநாறிமலையினை சுற்றி பொலிஸாரால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டநிலையில் 5கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர். மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு அது தொடர்பான ஏற்ப்பாடுகளை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் பிரதம பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் நேற்றயதினம் இரவு நெடுங்கேணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.அரசகாட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுளைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்றையதினம்…
எவர் ஜனாதிபதியாக வந்தாலும் முகம்கள்தான் வேறு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று(08) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து சர்வதேச மகளீர்தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டத்தின் 2209 ஆவது நாளினை முன்னிட்டும் முல்லைத்தீவு நகர சுற்றுவட்ட பாதையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட வலிந்து…
சிவனை வணங்ககூட உரிமை இல்லாத நாடாக இலங்கை!
சிவனை வணங்ககூட உரிமை இல்லாத நாடாக இலங்கை இருக்கின்றது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று(08) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து சர்வதேச மகளீர்தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் முன்னெடுத்துவரும் தொடர்போராட்டத்தின் 2209 ஆவது நாளினை முன்னிட்டும் முல்லைத்தீவு நகர…
இந்திய இழுவைப்படகினால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவ குடும்பத்தின் கதை!
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய இழுவைப்படகுகள் வராமால் தடுத்தால்தான் இலங்கை மீனவர்கள் நின்மதியாக கடற்தொழில் செய்து வாழமுடியும் என்று இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவினை சேர்ந்த மீனவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள். இந்திய இழுவைப்படகினால் கடற்தொழிலை இழந்து மீண்டும் தொழில் செய்யமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மீனவர் ஒருவரின் கதை..முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் வசித்து வரும் மூன்று பெண்பிள்ளைகளின் தந்தை போரின்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னைகளுக்கு ஏற்படும் நோய்த்தாக்கம்!
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட முள்ளியவளை,தண்ணீரூற்று,முறிப்பு,முல்லைத்தீவ,வற்றாப்பளை,உடுப்புக்குளம்,அளம்பில்,செம்மலை,சிலாவத்தை போன்ற பகுதிகளில் வெண் ஈயின் தாக்கம் அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த ஈ தாக்கத்தினால் தென்னைமரங்களின் ஓலைகள் கறுப்பாகியதுடன் சில இடங்களில் கருகிய நிலையும் காணப்படுகின்றது இதனால் தெங்கு செய்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பாரியளவிலான தேங்காய்கள் வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன இவ்வாறான…
புதுக்குடியிருப்பு கிழக்கில் பேராற்று நீரினை பயன்படுத்தி 1057 ஏக்கரில் நெற்செய்கை!
புதுக்குடியிருப்பு கிழக்கு விவசாயக்குழுக்கூட்டம் இன்று 06.03.24 அன்று நடைபெற்றுள்ளது.புதுக்குடியிருப்கு கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் புதுக்குடியிருப்பு கிழக்கில் பேராற்றின் கழிவு நீரினை பயன்படுத்தி சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான தீர்மானங்கள் எடுக்கும் கூட்டம் புதுக்குடியிருப்பு கமநலசேவைத்திணைக்களத்தில் புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது புதுக்குடியிருப்பு கமநல சேவைத்திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் சுஜீவராகவன்…