Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: June 2024

33000 what is power மின்இணைப்பிற்கு கிட்ட சென்றால் இழுத்து அடிக்கும்- நடந்த சம்பவம்!

33000 கிலோவாட்ஸ் மின்கம்பிக்கு கிட்ட சென்றால் இழுத்தடிக்கும்!இலங்கை மின்சாரசபையில் மக்களின் மின்சார பாவனைக்காக இணைக்கப்பட்டுள்ள 33000 கிலோ வாட்ஸ் இணைப்பு மின்கம்பிகளுக்கு கிட்ட செல்லும் போது அழு இழுத்து தாக்கும் என்ற விடையம் பலருக்கு தெரியாத நிலையில் புதுக்குடியிருப்பில் இருவர் இவ்வாறு அதியுயர் மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் 26.06.2024 அன்று இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின்…

ஏ9 வீதியில் விபத்து மூ.வ.ர்.ப.லி -தரித்து நின்றபேருந்துடன் பாரஊர்தி மோதியது!

முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு திருத்த வேலை மேற்கொள்ளப்பட்டிருந்த போது நேற்றிரவு (25-06.2024 ) 12…

முல்லைத்தீவு பாடசாலை மாணவன் மீது ஆசிரியர் கொடூர தாக்குதல்!

முல்லைத்தீவு நகரப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் பாடசாலை மாணவனை ஆசிரியர் ஓருவர் சரமானியாக கையால் தாக்குதல் நடத்தியதில் குறித்த மாணவன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் இந்த சம்பவம் கடந்த 19.06.2024 அன்று முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது. உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் முல்லைத்தீவினை சேர்ந்த குறித்த…

முல்லைத்தீவு மருத்துவமனை ஊழியரை தாக்கிய பெண் ஊழியர் கைது!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பெண் ஊழியர் வருவர் மீது கடந்த 30.05.2024 அன்று மற்றும் ஒரு பெண் ஊழியரால் தாக்குதல் நடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்கான பெண் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட பெண் ஊழியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியளை…

முள்ளியவளை பகுதியில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான 14 அகவை சிறுமி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்கா முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றிதெரியவருகையில் 14 அகவையுடை சிறுமி ஒருவர் கடந்த 11.06.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற நிலையில் அவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு…

சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம்!

ஊடகவியலாளர்கள்மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தும் முல்லைத்தீவு ஊடக அமையம். நாட்டில் தமிழ் ஊடகவியலாளர்கள்மீதான தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் மற்றும், அடக்குமுறைகளுக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியமென முல்லைத்தீவு ஊடகஅமையம் வலியுறுத்தியுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச்சேர்ந்த தம்பித்துரை பிரதீபன் என்னும் ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்டமை மற்றும், அவரின் வீட்டிலிருந்த சொத்துக்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே…

மிஹிந்தலையில் இருந்து குருந்தூர் மலை நோக்கி பாத யாத்திரை!

இலங்கையின் பௌத்த சங்கத்தினராகிய மஹாசங்கத்தினரின் ஏற்பாட்டில் மிஹிந்தலையில் இருந்து முல்லைத்தீவிற்கான பாதாயாத்திரை ஒன்று தொடங்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இந்த பாதயாத்திரை எதிர்வரும் 20 ஆம் திகதி முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற உத்தரவினை மீறி கட்டப்பட்ட குருந்தி விகாரை நோக்கி பௌத்த துறவிகள் பாதயாத்தரை மேற்கொண்டு வருகின்றார்கள். வடக்கின் மிகப்பெரிய போதி விகாரை என சிங்கள…

முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு விரும்பம் கொள்ளாத அதிபர்!

முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு விரும்பம் கொள்ளாத அதிபர்! முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு அ.த.க.பாடசாலையில் கடந்த 8 மாதங்களாக அதிபர் இல்லாத நிலை காணப்படுவதாக தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத நிலையில் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடிய பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். நேற்று 19.06.2024 7.20 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம்…

முல்லைத்தீவில் கிராமம் ஒன்றில் இராணுவத்தினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!

முல்லைத்தீவில் கிராமம் ஒன்றில் இராணுவத்தினால் விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேசத்தில் உள்ள பகுதி ஒன்றில் வாழும் மக்களுக்கு இராணுவத்தினரால் முக்கிய அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. துணுக்காய் பிரதேசத்தில் கொக்காவில் செல்லும் வீதியில் உள்ள ஆலங்குளம் சந்தியில் பாலை மரம் ஒன்றில் இந்த அறிவிப்பு பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 57…

முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு விலங்குகள் தொடர்பான எச்சரிக்கை பதாதை தேவை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு முதன்மை வீதிகள் காடுகளுக்கு ஊடாகவே காணப்படுகின்றது இவ்வாறு காடுகள் சூழ்ந்த பிரதேசத்தில் காட்டு விலங்களின் நடமாட்டத்தினை காணக்கூடியதாக இருக்கின்றது குறிப்பாக பயணிகளுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் காட்டுயானைகள் வீதிகளின் குறுக்கே செல்கின்ற அவைகள் செல்லும் பாதைகளை இனம் கண்டு அவற்றை வீதியில் அடையாளப்படுத்த வேண்டிய தேவை சம்மந்தப்பட்ட திணைக்களத்திற்கு உண்டு. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு…