Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முள்ளியவளையில் பொலீசார்மீது தாக்குதல் தப்பிச்சென்ற சந்தேக நபர்கள்!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட தண்ணீரூற்று கணுக்கேணி சந்திக்கு அருகில் இரவு கடமையில் நின்ற பொலீஸ் உத்தியோகத்தர் மீது அடையாளம் தொரியாத நபர்கள் மோட்டார் சைக்கிலால் பொலீஸ் உத்தியோகத்தர் மீது மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணுக்கேணி சந்தி பகுதியில் நேற்று இரவு (29-02-24) கடமையில் நின்ற பொலீஸ் உத்தியோகத்தர்கள் முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் ஒன்றினை மறித்த போது மோட்டார் சைக்கிலால் கடமையில் நின்ற பொலீஸ் உத்தியோகத்தர் மீது மோதிவிட்டு மோட்டார் சைக்கிலில் வந்த இரு நபர்கள் தப்பி சென்றுள்ளார்கள்.

இதன்போது படுகாயமடைந்த பொலீஸ் உத்தியோகத்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்கா யாழ்போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொலீசார் மீதுவிபத்தினை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிலை பொலீசார் மீட்டுள்ளதுடன் விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய இருவரையும் தேடிபிடிக்கும்நடவடிக்கையில் முள்ளியவளை பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *