நெத்திப்பொட்டு வெடியில் உயிரிழந்த யானை-தலையில் இருந்து குண்டு மீட்பு!

உயிரிழந்த யானையில் இருந்து முக்கிய தடையப்பொருள் மீட்பு!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கள்ளியடி வயல் வெளிப்பகுக்கு பக்கமாக உள்ள பற்றைக்காடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் யானையின் உடலம் ஒன்று இன்று 02.08.2024 இனம் காணப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை புதுக்குடியிருப்பு பொலீசாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

யானையின் உயிரிழப்பு தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் உயிரிழந்த யானைக்கு உடற்கூற்று மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட போது யானையின் தலையில் சட்டவிரோத துப்பாக்கி சன்னம் ஒன்று பாய்ந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த யானை உயிரிழந்துள்ளமை சட்டவிரோத துப்பாக்கி சன்னம் பட்டு என தெரியவந்துள்ளதை தொடர்ந்து இது திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிந்துள்ளது.

இந்த நிலையில் யானை உயிரிழந்த பிரதேசம் பற்றைக்காட்டு பகுதியாக காணப்படுகின்றது அதற்கு அருகில் விவசாயி ஒருவர் நெற்செய்கை மேற்கொண்டு வந்துள்ளார் அந்த விவசாயி நாள்தோறும் குறித்த யானையினை காண்பதாகவும் வெடி போட்டு கலைப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவ்வாறே நேற்று(01.08.2024) அன்று இரவும் நெற்செய்கைக்கு காவல் காத்த விவசாயி யானையினை கண்டுள்ளார் சீனா வெடி எனப்படும் யானை வெடிகளை விவசாயிகள் எறிந்து நெற்பயிருக்குள் யானை வந்து நாசம் செய்யாமல் கலைத்துவரும் நிலையில் குறித்த யானை மீது யார் துப்பாக்கிசூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அருகில் உள்ள விவசாயிடம் பொலீசார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு கிழக்கு கிராம சேவகரின் ஏற்பாட்டில் குறித்த யானையின் உடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காட்டு யானைகளால் நாள்தோறும் பல ஏக்கர் நெற்செய்கை மற்றும் மேட்டுநில பயிர்செய்கை அழிவினை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Admin Avatar