தேராவில் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் 15 அகவையுடைய சிறுமியினை கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 18 அகவை இளைஞனை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்
புதுக்குடியிருப்பு தேராவில் கிராமத்தில் 18 அகவையுடைய இளைஞன் ஒருவர் தனது வீட்டில் 15 வயதும் 10 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருவரை அழைத்துவந்து தங்கவைத்துவருவதாக புதுக்குடியிருப்பு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன் இளைஞனையும் கைதுசெய்துள்ளார்கள்.

குறித்த சிறுமி பாட்டியுடன் வாழ்ந்து வந்த நிலையில் குறித்த இளைஞனுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இளைஞன் அழைத்து சென்று சிறுமியுடன் உறவு கொண்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் சட்டவைத்திய அதிகாரியிடம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுமியுடன் உறவுகொண்ட இளைஞனை 05.08.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Admin Avatar