புதுக்குடியிருப்பு சிறிசுப்பிரமணிய வித்தியாசாலையினை பார்த்து வியந்த மனோ!


பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் இன்று 14.06.23 முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் இவர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனது நண்பர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சிறி சுப்பிரமணிய வித்தயாசாலைக்கு பயணம் மேற்கொண்டு அதிபரின் முன்மாதிரியான செயற்பாடு தொடர்பில் வியப்படைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை ஆரம்ப பாடசாலையில் அதிபர் கடமை அலுவலகம் முற்றுமுழுமையாக இயற்கையால் அமையப்பெற்று;ளளது.

அதிபர் அலுவலகம் மரவேலைப்பாடுகள் மூலம் இயற்கையில் அமைந்துள்ளது.
பாடசாலையில் மாணவர்களுக்கான கற்றல் வகுப்பறைகள் அனைத்தும் ஸ்மாட் வகுப்பறைகளாக காணப்படுகின்றன அதிபரின் முயற்சியால் இந்த வகுப்பறைகள் அனைத்தும் ஸ்மாட் வகுப்பறையில் மாணவர்கள் அனைவரும் கல்வி கற்று வருகின்றார்கள் என்ற பெருமைக்குரிய வித்தியாசாலையாக இந்த பாடசாலை அமைந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் பாடசாலைக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் அலவலகத்தில் அதிபரின் திட்டமிடல் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன் ஸ்மாட் வகுப்பறைகள் தொடர்பிலும் பார்வையிட்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
முன்மாதிரியான பாடசாலையாக சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை அமைந்துள்ளது என மனோகணேசன் தனது முகநூல்பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *