Monday, December 29, 2025
HomeMULLAITIVUஇந்திய இழுவைப்படகுகளால் அழிக்கப்படும் இறால் வளம்!

இந்திய இழுவைப்படகுகளால் அழிக்கப்படும் இறால் வளம்!

முல்லைத்தீவு கடலில் இந்திய இழுவைப்படகுகளில் அத்துமீறல்களால் இயற்கை கடல்வளம் அழிக்கப்படுவதுடன் முக்கியமாக இறால் வளம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு கடலில் தற்போது இறால் சீசன் தொடங்கியுள்ளது இந்த நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டினை சேர்ந்த இழுவைமடிப்படகுகள் கடலில் உள்ள அனைத்து வளங்களையும் அள்ளிசெல்கின்றார்கள் இழுவை மடி படகுகளில் வலைகளில் கடலில் நிலத்தில் கிடக்கும் சங்கு உள்ளிளட்ட மீன்குஞ்சுகள்,இறால்கள் இறால் குஞ்சுகள் என அனைத்து வளங்களும் சுறையாடப்படுகின்றன.

இதனால் இப்போது முல்லைத்தீவு மீனவர்களின் வலைகளில் இறால் பிடிபடுவது குறைவாக காணப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.கடந்த நவம்பர் மாதம் தொடக்கம் ஒருமாதகாலமாக இயற்கை சீர் இன்மை காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத கடற்தொழிலாளர்கள் இப்போது கடற்தொழில் நடவடிக்கையில் மெல்ல மெல்ல ஈடுபட்டு வருகின்றார்கள்.
கடற்தொழிலாளர்களின் வலைகளில் மழைவெள்ளத்தினால் ஆற்றுபகுதி ஊடாக தரைகளில் கிடந்த கஞ்சல்கள் தடிகள் புற்கள் என்பன கடலின் நீரோட்டத்தில் ஓடும் ஆற்றுப்பகுதிகளில் காணப்படுகின்றன.

இவ்வாறு கடலில் கிடக்கும் கஞ்சல்கள்தான் வலைகளில் சிக்குண்டு அதனை பிரிப்பதிலோயே மீனவ குடும்பங்களின் காலம் போவதாக தெரிவித்துள்ளார்கள்.இந்தநிலையில் முல்லைத்தீவு கடகில் இறால் பிடி சீசன் நிலையில் முன்னைய காலங்களில் ஒரு படகிற்கு 10 கிலோவிற்கு மேல் பிடிபடும் ஆனால் இப்போது அவ்வாறு இல்லாத நிலை காணப்படுகின்றது ஒரு கிலோ இறால்கூட வலையில் படுவது கஸ்ரமாக இருக்கின்றது

இதற்கு முக்கிய காரணம் கடல்அடி மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக கடற்தொழிலுக்கு செல்லாத காலங்களில் எல்லாம் இந்திய இழுவை படகுகள் எங்கள் கடலில் உள்ள கடல் வளங்களை எல்லாம் சுறண்டிசென்றுள்ளார்கள்.
இந்த நிலையில் எங்கள் கடல் எல்லைக்குள் வரும் இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் தான் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் என்றும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments