Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் மூன்று படகுகள் 12 மீனவர்கள் கைது!

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 12 கடற்தொழிலாளர்களை நாயாறு கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

21.05.23 அன்று இரவு முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து நாயாறு கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மூன்று படகுகள் சட்டவிரோத கடற்தொழிலான ஒளிபாச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈபட்டுக்கொண்டிருந்துள்ளார்கள் இந்த மூன்று படகில் இருந்த 12 பேரையும் கைதுசெய்துள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் படகினையும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினர் இவர்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *