Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

ஒட்டிசுட்டானில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் ஆறுபேர் கைது!

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் ஆறு பேரை ஒட்டிசுட்டான் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

13.05.23 அன்று மாலை கனகரத்தினபுரம் பேராற்றினை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான இடத்தில் புதையல் தோண்டப்படுவதாக ஒட்டிசுட்டான் பொலீசாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற பொலீஸ் குழு அங்கு புதையல் தோண்ட முற்பட்ட குழுவினை கைதுசெய்துள்ளார்கள்.
கனகரத்தினபுரத்தினை சேர்ந்த ஒருவர் மாத்தளையினை சேர்ந்த ஒருவர் கிளிநொச்சியினை சேர்ந்த நால்வர் என ஆறு பேர் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட சுட்டியல்,மண்வெட்டி மற்றும் தொல்பொருள் ஆபரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது குறித்த நபர்களை 23.05.23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *