Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் பிரண்ட வாகனம்!

புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்திற்கு முன்னால் வீதியில் குறுக்கறுத்த நாய்க்கு வாகனத்தினை திருப்ப முற்பட்ட போது வாகனம் குடைசாய்ந்ததில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் இந்த சம்பவம் இன்று 13.05.23 காலை இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து இரணைப்பாலை நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய பட்டாவகையான வானம் ஒன்று பிரதேச செயலகத்தினை அடுத்து கமநல சேவை திணைக்களத்திற்கு முன்பாக வீதியால் குறுக்கறுத்த நாய் ஒன்றிற்கு விலத்தும் போது வாகனம் குடைசாய்ந்துள்ளது

இதன்போது வாகனத்தில் இருந்த பொருட்கள் கழிவு வாய்க்காலக்குள் விழுந்துள்ளதுடன் வானனத்தில் இருந்த இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வாகனம் நிமித்தி எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் இடத்திற்கு வீதி பொக்குவரத்து பொலீசார் வருகை தந்து விபத்தினை பார்வையிட்டுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *