இடியன் துப்பாக்கியுடனும் கசிப்புடனும் பதுக்குடியிருப்பு வாசி கைது!


கேப்பாபிலவு காட்டுப்பகுதியில் இடியன் துப்பாக்கி கசிப்புடன் ஒருவர் கைது!
முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபிலவு காட்டுப்பகுதியில் சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கி மற்றும் கசிப்பு என்பனவற்றுடன் புதுக்குடியிருப்பினை சேர்ந்த நபரை சிறப்பு அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

இந்த சம்பவம் 09.05.23 நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கேப்பாபிலவு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில்  20 லீற்றர் கசிப்பினை வைத்திருந்த நபரை கைதுசெய்தவேளை அவரிடம் இருந்த சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கியினையும் மீட்டுள்ளார்கள்.

சந்தேக நபரையும் சான்று பொருட்களையும் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் சிறப்பு அதிரடிப்படையினரால் பாரப்படுத்தப்பட்டுள்ளது முள்ளியவளை பொலீசார் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள்.

Loading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *