உடையார் கட்டில் வீதியால் சென்ற பெண்ணின் பணப்பையினை கொள்ளையடித்த கும்பல்!


உடையார்கட்டு பகுதியில் வீதியால் சென்ற பெண்ணிடம் லட்சகணக்கான பணத்தினை கொள்ளையடித்த மோட்டார்சைக்கில் கும்பல்

முல்லைத்தீவு புதுக்குடியிருபு;பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு நகர் பகுதியில் உள்ள ஏ.ரி.எம்.இயந்திரத்தில் பணத்தினை எடுத்துவிட்டு வீதியால் நடந்து சென்ற பெண்ணின் பணப்பபையினை உந்துருளியில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் ஒன்று 09.05.23 நேற்று பதிவாகியுள்ளது.

குரவில் பகுதியினை சேர்ந்த குறித்த பெண் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

உடையார் கட்டு பகுதியில் உள்ள ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணத்தினை எடுத்து தன்னிடம் உள்ள பணம் என இரண்டு இலட்சத்தி எண்பதாயிரம் வரையான பணத்தினை கைப்பையில் கொண்டு சென்றவேளை இந்த கொள்ளை சபம்வம் இடம்பெற்றுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *