Tuesday, April 29, 2025
HomeUncategorizedபுதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் போரின் உயிரிழந்த மக்களின் 14ஆம் அண்டு நினைவு எதிர்வரும் 18 ஆம் திகதி நினைவிற்கொள்ளப்படவுள்ள நிலையில் முள்ளிவாய்க்காலில் மக்கள் பட்ட அவலத்தினையும் கஞ்சிக்காக அலைந்த மக்களின் நினைவுகளை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற நோக்கிலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கஞ்சி காச்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

10.05.23 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பு கஞ்சி காச்சி மக்களுக்கு வழங்கம் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் முருகன் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் கஞ்சி காச்சப்பட்டு முள்ளிவாய்க்காலில் மக்கள்பட்ட அவலத்தினைவெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments