முல்லைத்தீவு பரந்தன்வீதியில் விபத்துஇளைஞன்பலி-மாடுகளை மோதி தள்ளிய மோட்டார்சைக்கில்!


கிளிநொச்சி புளியம்பக்கணை பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று (09.05.23) அதிகாலை 3.30 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டாவலைப் பகுதியில் இருந்து புளியம்பொக்கணை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் சிறு காயங்களுக்குள்ளானார்.சம்பவ இடத்தில் இரண்டு கால்நடைகளும் இறந்துள்ளன. 18 வயதுடைய புளியம்பக்கடை பகுதியைச் சேர்ந்த இளைஞனே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.

அதிகவிலைகூடிய மோட்டார்சைக்கிலில் வேகமாக பயணித்து மாட்டுடன் மோதிக்கொண்டதில் விபத்து இடம்பெற்றுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *