ஹர்த்தாலுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் முழுமையான ஆதரவு!


பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்தின் பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக 25.04.23 வடக்கு கிழக்கு தழுவிய தாயக பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதற்கு அமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் முழுமையான ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு,உடையார்கட்டு,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,முள்ளியவளை,மாங்குளம்,ஒட்டுசுட்டான்,மல்லாவி வர்த்தகர்கள் தங்கள் வணிக நிலையங்களை மூடி ஆதரவினை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு எதிர்பினை வெளிப்படுத்தி ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *