Sunday, April 27, 2025
HomeUncategorizedமுல்லைத்தீவில் தேர்தல் விதிமுறையினை மீறிய நபர் கைது!

முல்லைத்தீவில் தேர்தல் விதிமுறையினை மீறிய நபர் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கூழாமுறிப்பு பகுதியில் தேர்தல் விதிமுறையினை மீறி செயற்பட்ட நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.

13.11.2024 இன்று மாலை ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் தேர்தல் விதிமுறையினை மீறும் வகையில் செயற்பட்ட நபர்தொடர்பில் பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கங்காரு சின்னம் பதிக்கப்பட்ட வர்ண பொருட்கள்,கொடிகள்,கங்காரு மார்ட் பெல்ட்,தொப்பிகள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

11 ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தேர்தல் வீதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த நபரை பொலீசார் கைதுசெய்து வழக்கு பதிவுசெய்துள்ளார்கள்.ஒட்டுசுட்டான் பொலீசார் மேற்கொண்ட சட்டநடவடிக்கையின் போது குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 19.11.2024 அன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலீசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments