Friday, January 30, 2026
HomeUncategorizedறெட்பானா சந்தியில் குடும்ப பெண்ணின் செயின் அறுப்பு!

றெட்பானா சந்தியில் குடும்ப பெண்ணின் செயின் அறுப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட றெட்பான சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிலில் சென்ற குடும்ப பெண்ணின் தங்க சங்கிலி மோட்டார் சைக்கிலில் சென்ற கொள்ளையர்களால் அறுக்க்பபட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
13.11.2024 இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டினை சேர்ந்த குறித்த குடும்ப பெண் தனது மகளை ஏற்றி வர தர்மபுரம் நோக்கி உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்தவேளை புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் றெட்பான மதுபான சாலைக்கு அருகில் ஒரு உந்துருளியில் வந்த இரண்டு நபர்கள் குறித்த பெண்ணின் களுத்தில் இருந்த தங்கு சங்கிலியினை அறுத்து சென்றுள்ளார்கள்.

மாலை நேரம் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பிரதேசத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பவுண் நிறைகொண்ட சுமார் ஆறு இலட்சம் பெறுமதியான தங்க சங்கிலியே இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்ப பெண் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதி விசாரணையினை புதுக்குடியிருப்பு பொலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments