முள்ளியவளையில் இடம்பெற்ற பட்டப்பகல் கொள்ளை!

18.10.2024 அன்று காலை முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தனியார் வங்கி ஒன்றிற்கு முன்பாக தரித்து நின்ற முச்சக்கர வண்டி உரிமையாளரிடம் பணம் பறிக்கப்பட்டு முச்சக்கரவண்டியும் அபகரித்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டி தவணை குத்தகை பணத்தினை கட்டவில்லை என தெரிவித்து மூவரினால் அபகரிக்கு முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் முச்சக்கர வண்டியின் உரிமையாளரின் சட்டடைப்பையில் இருந்து 25 ஆயிரம் ரூபா பணத்தினையும் அபகரித்து சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபர்கள் மூவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய இருவர் தப்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணையினை முள்ளியவளை பொலீசார் முன்னெடுத்துள்ளார்கள்.

Admin Avatar