Monday, April 28, 2025
HomeUncategorizedகிராமசேவையாளர்கள் சிலரை தற்காலிகமாக பணி இடைநிறுத்திய புதிய அரசு!

கிராமசேவையாளர்கள் சிலரை தற்காலிகமாக பணி இடைநிறுத்திய புதிய அரசு!

நாட்டில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிராம சேவையாளர்கள் 12 பேர்வரை புதிய அரசாங்கம் தற்காலிக பணி இடைநிறுத்திவைத்துள்ளது.

கிராமசேவையாளர் தெரிவு போட்டிமூலம் தெரிவுசெய்யப்பட்ட கிராம சேவையாளர்களே இந்த பிரச்சினையினை எதிர்கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு இரண்டு கிராம சேவையாளர்கள் பணிஇடைநித்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் ஒரு கிராமசேவையாளரும்,மாந்தை கிழக்கில் ஒரு கிராமசேவையாளரும் என நாட்டில் 12 கிராம சேவையாளர்களை புதிய அரசாங்கம் பணிஇடைநிறுத்தியுள்ளது

குறித்த கிராம சேவையாளர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் (கிளியறன்ஸ்)அனுமதி கடிதம் அனுப்பிவைக்காத காரணத்தினால் இவர்களுக்கான பணியினை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments