லஞ்சம் வாங்க முற்பட்ட மோட்டார் திணைக்கள பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவர் கைது!

இலங்கையில் லஞ்சம் வாங்க முற்பட்ட மோட்டார் திணைக்கள பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவர் கைது!
இலங்கையின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பணிபுரியும் பிரதி ஆணையாளர் மற்றும் எழுத்தாளர் தரகர் ஒருவராக மூவர் லஞ்சம் பெற்ற குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இலஞ்ச ஊழர் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
மூன்று பேருந்துக்களின் உரிமையினை மாற்றுவதற்காக இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைடுத்து இலங்சு ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

விசாரணைகள்தொடர்வதால் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றார்கள்.

Admin Avatar