Monday, April 28, 2025
HomeUncategorizedகேப்பாபிலவு இராணுவ முகாமினால் வழங்கப்பட்ட குடிநீர்சேவை நிறுத்தம்-மக்கள் அவதி!

கேப்பாபிலவு இராணுவ முகாமினால் வழங்கப்பட்ட குடிநீர்சேவை நிறுத்தம்-மக்கள் அவதி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு பாதுகாப்பு படைப்பிரிவினால் இலவசமாக வழங்கப்பட்டுவந்த குடிதண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

கேப்பாபிலவு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இருந்து பொதுமக்களுக்காக குடிதண்ணீர் விநியோகம் ஒன்று கடந்த காலங்களில் இருந்து செயற்பட்டு வந்துள்ளது.

இதனால் பல மக்கள்  குறிப்பாக கேப்பாபிலவு மக்கள்,கேப்பாபிலவு மாதிரி கிராம மக்கள்,இராணுவத்தினர்,பயணிகள்,பேருந்து ஓட்டுனர்கள் உள்ளிட்டவர்கள் இந்த குடிதண்ணீர் பெற்றுவந்துள்ளார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த குடிதண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதனால் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கேப்பாபிலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments